தைப்பிங் மருந்தகத்தில் கொள்ளை; 4 மணி நேரத்தில் சந்தேக நபர் கைது

ஈப்போ:

தைப்பிங்கில் உள்ள ஒரு மருந்தகத்தில் கொள்ளையடித்த நபரை நான்கு மணி நேரத்திற்குள் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இரவு 10.27 மணியளவில் மருந்தக உதவியாளராகப் பணிபுரியும் 28 வயது பெண்ணிடம் இருந்து வந்த புகாரின் பேரில், 20 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தைப்பிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் நசீர் இஸ்மாயில் தெரிவித்தார்.

“குறித்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி, கல்லாவிலிருந்த பணத்தை எடுக்க அந்த ஆடவன் வற்புறுத்தினார் என்றும், அந்தப்பெண் தன் பாதுகாப்புக்கு பயந்து, சந்தேக நபரிடம் RM300 கொடுத்தார் என்றும் அவர் மேலும் கூறினார்.

குறித்த புகாரின் அடிப்படையில் துரிதமாக விசாரணை மேற்கொண்ட தைப்பிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு சந்தேக நபரைக் கைது செய்து, கொள்ளையடித்த பணத்துடன் ஒரு கத்தியையும் கைப்பற்றினர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 392/397 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேகநபர், இன்று முதல் ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் முஹமட் நசீர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here