கோலாலம்பூர்:
குடியுரிமை விண்ணப்பங்களுக்கான முடிவு ஓராண்டுக்குள் இறுதி செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த நடைமுறை அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும், குடியுரிமைப் பிரச்சினைகளை திறமையாகவும் வேகமாகவும் கையாள்வதற்காக, உள்துறை அமைச்சால் இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அவற்றை உறுதி செய்வதற்கான மடானி அரசாங்கத்தின் ஒரு முயற்சி என்றும், அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல், குடியுரிமை பெறுவதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும் ஆராய்ந்து ஒரு வருடத்திற்குள் அதன் தீர்வு அறிவிக்கப்படும் என்று டத்தோஶ்ரீ சைபுடின் கூறினார்.