‘சேவ் மலேசியா’ பேரணி -மஸ்ஜிட் ஜாமேக்கை வந்தடைந்தனர்

கோலாலம்பூர்:

சோகோ ஷாப்பிங் சென்டரை நோக்கி நகரும் ‘சேவ் மலேசியா’ பேரணியின் வெள்ளைச் சட்டை அணிந்த பங்கேற்பாளர்கள் குழு ஒன்று இங்குள்ள மஸ்ஜிட் ஜாமேக்கை வந்தடைந்தனர்.

ஸுகூர் தொழுகைக்கான அசனைத் தொடர்ந்து , அதிகமான பங்கேற்பாளர்கள் மசூதிக்குள் பிரார்த்தனை செய்ய நுழைவதைக் காண முடிந்தது.

பங்கேற்பாளர்கள் அணிவகுப்பின் ஒரு பகுதியாக வெள்ளைச் சட்டை அணிந்த பேராட்டக்காரர்கள் ஒன்றுக் கூடி, இன்று மதியம் 1.50 மணியளவில் தங்கள் அணிவகுப்பைத் தொடங்கினர்.

அவர்கள் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்திற்கு சென்று அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் நேற்று, குறித்த பேரணிக்கு எதிராக மொத்தம் 22 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here