போர்ட் கிள்ளானில் கனமழை – 50க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கின

போர்ட் கிள்ளானில் கனமழையைத் தொடர்ந்து இங்குள்ள ஜாலான் சரோஜாவில் கிட்டத்தட்ட 50 வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நான்கு தசாப்தங்களில் இந்த இடம் வெள்ளத்தில் மூழ்குவது இதுவே முதல் முறை என்று குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் சி.மகேஸ்வரன், கடும் மழையின் போது கூட, தாம் வசிக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை தங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் வரவில்லை. அடைக்கப்பட்ட வடிகால்கள் வெள்ளத்திற்கு காரணத்திற்கு இருந்ததாகவும் அவர் கூறினார்.

மகேஸ்வரனின் கூற்றுப்படி, அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் உடமைகளை மீட்க முடியாமல் நஷ்டமடைந்துள்ளனர். இங்குள்ள அனைத்து தரை வீடுகளிலும் மற்றும் எங்களபொருட்களை நகர்த்துவதற்கு மேல் தளம் இல்லை  என்று அவர் கூறினார்.

போர்ட் கிள்ளான் தீயணைப்பு நிலையத் தலைவர் ரசிப் முகமட் ஹரிஸ் வெள்ளப்பெருக்கை உறுதிசெய்து தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றார். கிள்ளான் முனிசிபல் கவுன்சில் அதிகாரி ஒருவர், அதனுடன் தொடர்புடைய துறைகள் அடைபட்டுள்ள வடிகால்களின் கோரிக்கைகளை விரைவில் பரிசீலிக்கும் என்றார்.

இதற்கிடையில், போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹுரி, போர்ட் கிள்ளான் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறினார். மழை மிகவும் கனமாக இருந்தது, இன்று மட்டும் 220 மிமீ மழை பெய்துள்ளது என்று அவர் கூறினார். அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வெள்ள வாயிலை பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here