உலோக தடுப்பு வாயிலில் மோதி உயிரிழந்த கைப்பை திருடன்

கூச்சிங், பத்து கவாவில் உள்ள பொது நடவடிக்கைப் படை முகாமின் பொது நடவடிக்கையின் போது  ஒரு கைப்பை திருடன் ஒரு  உலோக தடுப்பில் வாயிலில் மோதி இறந்தார். 32 வயதுடைய சந்தேக நபர் ஒரு பெண்ணின் கைப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது போலீஸ் முகாமின் உலோக வாயிலில் மோதிய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று ஒரு அறிக்கையில், படவான் மாவட்ட காவல்துறைத் தலைவர் இர்வான் ஹபீஸ் ராட்ஸி, மதியம் 1.30 மணியளவில் கணவரின் மோட்டார் சைக்கிளில் தனது குழந்தையுடன் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணை சந்தேக நபர் குறிவைத்ததாகக் கூறினார். சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று அவர் மேற்கோள் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here