கோலாலம்பூர்:
வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.14) உழவர் திருநாளான தைப்பொங்கல் மலேசியாவிலுள்ள அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. அதேநேரம் தமிழர் நாட்காட்டியின்படி மலேசிய நேரப்படி அன்று பிற்பகல் 3.11 மணிக்கு தை மாதம் பிறக்கிறது.
இந்த நன்நாளில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக சூரியப்பொங்கல் வைக்க காலை 7.30 மணி முதல் 10 மணி வரையான காலப்பகுதியும், மாலை 5.30 முதல் 6.30 வரையான காலப்பகுதியும் உகந்த நேரம் என ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
எனவே இந்த நேரங்களை கடைப்பிடித்து நீங்களும் பொங்கல் வைத்து, இந்த இனிய நாளை கொண்டாடி மகிழுங்கள்.





















