கூச்சிங்:
இன்று காலை நிலவரப்படி, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,385 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 1,406 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் தற்போது அங்குள்ள மொத்தம் 43 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBN) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்நிலையில் இன்று மாநிலம் முழுவதும் கனமழை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எதிர்வுகூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.





















