மலாக்கா:
நேற்று மாலை, தனது வீட்டின் குளியலறையில் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் இல்லத்தரசி ஒருவர் இறந்து கிடந்தார்.
‘பிற்பகல் 3.30 மணியளவில், Bukit Katil, Taman Vista Kiranaவில் உள்ள வீட்டின் குளியலறையில் அவரது அத்தை, லிம் ஜியோக் லெங் (65), இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டதாக தான் சீ ஜீ (34) என்ற பெண் கண்டுபிடித்தார்” என்று தென் மலாக்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவரின் இடது மார்பில் மூன்று கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன. மேலும் இடது மார்பில் ஒரு கத்தி குத்திய நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டது.
” பாதிக்கப்பட்ட பெண் தனது ஏழு வயது மகனுடன் குறித்த வீட்டில் இருந்தார் என்றும், அவரது கணவர் வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுவிட்டார்,” என்றும் அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் உள்ள CCTV கேமரா காட்சிகளை சரிபார்த்தபோது, குறித்த வீட்டின் முன் மற்றும் பின் கதவுகள் வழியாக உள்ளேயும் வெளியேயும் சந்தேகத்திற்குரிய யாரும் வரவோ போகவோ இல்லை என்று கூறினார். மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் வீட்டின் உள்பகுதியை முழுமையாக ஆய்வு செய்ததில் கொள்ளையடித்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் ACP கிறிஸ்டோபர் கூறினார்.
“இந்நிலையில் மரணத்திற்கான காரணத்தை அறிய பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் இன்று பிரேதப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.