சிங்கப்பூர் மீடியா கார்ப் Mediacorp நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒலி 96.8 வானொலியின் அறிவிப்பாளர் குணாளன் மோர்கன் மீது, பெண்களின் மர்ம உறுப்புகளைக் கைப்பேசியில் பதிவுச் செய்ததாகவும், 16 வயதுக்குட்பட்டவருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டது.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது குணாளன் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் முன்னிலையாகவில்லை; மேலும் அவரும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினார். பின்னர் வழக்கறிஞரை நியமிப்பதாக நீதிதியிடம் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிபதி அறிவித்தார்.
வானொலியில் அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வரும் குணாளன் கைதான பிறகு அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பதை MediaCorp நிறுவனம் உறுதிப்படுத்தியது.









