யூன்லின் நிறுவனத்தின் 17 வகை தயாரிப்புகள் என்.எஸ்.கே. பேரங்காடியில் விற்பனையில்

கோலாலம்பூர்,

யூன்லின் நிறுவனத் தயாரிப்பிலான 17 பொருள்கள் மலேசியாவின் பிரபல வணிகப் பேரங்காடியான என்.எஸ்.கே.வில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மொறு மொறுப்பான நிலக்கடலை, அரிசி பிஸ்கட்டுகள், பழ ஜெல்லிகள் உள்ளிட்ட பலவகையான திண்பண்டங்கள் இந்த உணவுப் பொருள்களில் அடக்கம். தைவானியநிறுவனமான யூன்லின் பலதரப்பட்ட விவசாய உற்பத்திப் பொருள்களின் அடிப்படையில் சுவையான உணவுப் பொருள்களை தயாரிக்கின்றன.

யூன்லின் மாவட்டம் வளமான காய்கறி பயிரீட்டு நடைமுறைகளைக் கொண்டுள்ளது. தரமான உணவுப் பாதுகாப்பின் வழி இங்கு பயிரீட்டு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆன்லைன் . ஆஃப்லைன் விற்பனையை ஒருங்கிணைப்பதுடன், உலகளாவிய உணவுக் கண்காட்சிகளில் பங்கேற்று, என்.டி.100 மில்லியனுக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது. மேலும், வாழைப்பழம், முட்டைகோஸ் போன்ற பசுமை காய்கறிகளை ஜப்பான்,தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த ஆண்டில், மலேசியாவின் பிரபல என்.எஸ்.கே. சூப்பர் மார்க்கெட் யூன்லின் குட்ஸ் உணவுப் பொருள்களுக்கான சிறப்புப் பிரிவு தொடங்கப்படுவதன் மூலம், மேலும் ஒரு முக்கிய சாதனை அடையப்பட்டுள்ளது. இதில், 6 நிறுவனத் தயாரிப்பின் 17 தயாரிப்புகள்: விற்கப்படுகின்றன.

மலேசிய உணவுச் சுவைக்கு ஏற்ப நேர்த்தியான வகையில் இந்தத் தயாரிப்புகள் கிடைப்பதாக குறிப்பிட்ட மலேசிய தைவான வர்த்தகத் தொழில்துறை சம்மேளனத்தின் துணைத் தலைவர் சாய் ஹிசின் தியென், தாய்நாட்டில் சுவைத்த உணவுப் பொருள்களை சுவை மாறாமல் மலேசிய மண்ணில் தரமான வகையில் உண்பது மிகவும் உணர்வுப் பூர்வமான விஷயமாகும் என்று குறிப்பிட்டார்.

யூன்லின் குட்ஸ் நிறுவனத்திற்கும் என்.எஸ்.கே. குரூப் நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கை கையெழுத்தான நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தரமான உணவுப் பொருள் என்ற அடிப்படையில் இனி யூன்லின் குட்ஸ் தயாரிப்புகள் ஏராளமான வாடிக்கையாளர்களைக் கவருவது திண்ணம் என்று என்.எஸ்.கே. குரூப் நிறுவனத் தலைவர் சிபி லிம் தமதுரையில் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here