கோலாலம்பூர்:
பாக்டீரியா தொற்றுக்குள்ளான பித்தப்பையை அகற்ற மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அமானா கட்சி உறுப்பினரும் பூலாய் சட்டமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுஹைசான் கயாட் நலமாக உள்ளார் என்றும், குணமடைந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இன்று இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பூலாய் எம்பி சுயநினைவுடன் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் ஜோகூர் அமானா கட்சி தலைவர் அமினோல்ஹுடா ஹாசன் உறுதிப்படுத்தினார்.
“சுஹைசானின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது அவரது நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.



















