பூச்சோங்கில் ஏற்பட்ட தீயில் வானகப் பட்டறை 70% அழிந்தது

 கோலாலம்பூர்: பண்டார் பூச்சோங் ஜெயாவில் உள்ள ஒரு வாகனப் பட்டறை ஞாயிற்றுக்கிழமை காலை (மே 4) தீப்பிடித்ததில் பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து புகை தெரிந்தது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், காலை சுமார் 10.56 மணியளவில் பேரிடர் அழைப்பு வந்தது.

நான்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 13க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். பட்டறை 70% அழிக்கப்பட்டது,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீயணைப்பு வீரர்கள் இன்னும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here