தெலுக் இந்தான்:
நேற்று ஜாலான் சுங்கை மாணிக்-சுங்கை லாம்பாமில் ஒன்பது ஃபெடரல் ரிசர்வ் யூனிட் (FRU) எனப்படும் கலகத் தடுப்பு போலீசார் உயிரிழந்த விபத்துடன் தொடர்புடைய லோரியின் ஓட்டுநர் நான்கு நாட்கள் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த தடுப்புக்காவல் உத்தரவை, ஹிலிர் பேராக் காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் பக்ரி ஜைனல் அபிடினின் மனுவைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் நைததுல் அதிரா அஸ்மான் வழங்கினார்.
இவ்வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக விசாரணைகள் தொடர்வதால், இந்த உத்தரவு இன்று முதல் சனிக்கிழமை வரை அமலில் இருக்கும்.
45 வயதான சந்தேக நபர் காலை 8.50 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





















