சிவ பெருமானை போற்றி துதிக்கும் ஓம் நம சிவாய மந்திரத்தை சிவன் கோவிலுக்கு செல்லும் போதும், பிரதோஷ வேளையிலும் சொல்லும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் இந்த மந்திரத்தை சொல்லுவதால் நமக்கு செல்வம் கிடைக்கும், நன்மை நடக்கும் நடக்கும் என்பதை தாண்டி வேறு என்னென்ன நடக்கும் என்பது தெரியாமலேயே பலரும் அந்த மந்திரத்தை விளையாட்டாக நினைத்து சொல்லி வருகிறார்கள்.
சிவ பெருமானுக்குரிய மந்திரங்கள் எத்தனையோ இருந்தாலும் அனைவரும் அறிந்த சிவ மந்திரம், சிவ நாமம் என்றால் அது ஓம் நமசிவாய மந்திரம் தான்
சிவ மந்திரங்களில் முதன்மையானதும், எளிமையானதுமாக சொல்லப்படுவது “ஓம் நம சிவாய” என்னும் மந்திரமாகும். சிவ பெருமானே உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருளாகும். சிவன் என்ற சொல்லுக்கு ஆனந்தம் அளிப்பவன் என்று பொருள். இதனால் இன்பம் அளிப்பவனை வணங்குகிறேன் என்றும் இந்த மந்திரத்திற்கு பொருள் கொள்ளலாம். சிவ பெருமானின் ஆசீர்வாதத்தையும், அளவில்லாத நன்மைகளையும் வழங்கும் மந்திரம் இதுவாகும். இந்த மந்திரம் ஆன்மாவையும், மனதையும் சுத்தம் செய்வதுடன் தியான நிலையை எளிதில் அடைவதற்கும் உதவும் மந்திரமாகும்.
தினமும் 108 முறை எழுதி வந்தால் துன்பங்கள், பயம் விலகும். நன்மைகள் அதிகம் நடக்கும் என சொல்லப்படுகிறது. 108 என்ற எண்ணிக்கையில் இல்லாமல் தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க, இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்லி வந்தால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தினமும் ஒரு மணி நேரம் ஓம் நம சிவாய மந்திரம் சொன்னால்
– நீங்கள் மௌன விரதம் இருந்ததாக கருதப்படும்.
– தினமும் ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு விருப்பமானது போது அமைதியாக வாழ்ந்ததாக அர்த்தம்.
– ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது.
– ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு அருகிலேயே இருந்ததற்கு சமமாகிறது.
– ஒரு மணி நேரம் பூஜை செய்ததற்கு சமம்.
– தினமும் ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்வதற்கான பரிகாரத்தை செய்ததாகிறது .
– ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது .
– ஒரு மணி நேரம் வேதம் ஓதிய பலன் கிடைக்கும்.
– ஒரு மணி நேரம் பெரியோர்களின் ஆன்மிக பேச்சு கேட்டதாகிறது.
– ஒரு மணி நேரம் நீங்கள் தூய்மையான பக்தியில் இருந்ததற்கு சமம்.
– ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.
– ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை வென்றவர்கள் ஆகிறீர்கள்.
– ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்.
– ஒரு மணி நேரம் சமாதி நிலையில் உள்ளவர் ஆகிறீர்கள்.
– ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள்.
– ஒரு மணி நேரம் நேர்மறையாக ஆக இருக்கிறீர்கள்.
– ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள்.
– ஒரு மணி நேரம் ஈசனுடன் நீங்கள் கை கோர்த்து இருக்கிறீர்கள்.
– ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
– ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை ஈசன் ரசித்துக்கொண்டு இருக்கிறான்.
– ஒரு மணி நேரம் மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள்.
– இந்த ஒரு மணி நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான்.
– ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள்.
– ஒரு மணி நேரம் நீங்கள் கங்கை மற்றும் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
– ஒரு மணி நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள்.
– ஒரு மணி நேரம் பிருந்தாவன மண்ணில் உருண்டு புரண்டவர் ஆகிறீர்கள்.
– ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிகிறீர்கள்.
இந்த மந்திரத்திற்கு மேல் நாமம் வேறு இல்லை, இறைவன் வேறு இல்லை என வேதங்கள் சொல்கின்றன. பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே இறைவன் திரு நாமம் சொல்ல முடியும் என்பார்கள். இந்த மந்திரத்தை எவர் ஒருவரால் ஒரு மணி நேரம் தொடர்ந்து சொல்ல முடிகிறதோ அவர்கள் மகா புண்ணியம் செய்தவர்கள் என சொல்லப்படுகிறது.




















