அதிகாலையில் கொட்டித்தீர்த்த கனமழை; ஷா ஆலமில் முழங்கால் அளவுக்கு உயர்ந்த வெள்ளம்!

கோலாலம்பூர்:

இன்று அதிகாலை 4 மணியளவில் பெய்த கனமழையால் ஷா ஆலம், புக்கிட் கெமுனிங், பிரிவு 32 இல் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அங்கு அரை மணி நேரத்திற்குள் நீர்மட்டம் திடீரென முழங்கால் உயரத்திற்கு உயர்ந்தது.

அங்குள்ள வீடுகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியதைக் காட்டும் வீடியோக்கள் மற்றும் நேரலை வீடியோக்களை அங்குள்ள குடியிருப்பாளர்கள் பதிவேற்றியபோது, இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here