கோலாலம்பூர்:
அம்பாங்கில் உள்ள தாமான் மெலாவதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில், 80,000 ரிங்கிட் மதிப்புள்ள 20.85 கிலோ மெத்தம்பேட்டமைனுடன் ஒரு வெளிநாட்டு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) மதியம் 12.35 மணியளவில் 50 வயதுடைய நபர் அந்தப் பகுதியில் கைது செய்யப்பட்டதாக அம்பாங்க் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
“சந்தேக நபர் சுமார் 10 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருவதாகவும், சிறுநீர் பரிசோதனையில் அவர் மெத்தம்பேட்டமைன் மற்றும் ஆம்பேட்டமைன் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இருப்பினும், அவருக்கு முன் குற்றப் பதிவு எதுவும் இல்லை” என்றும் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் விசாரணைகளுக்காக சந்தேக நபர் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்படுவார் என்று முகமட் அசாம் மேலும் கூறினார்.
இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.





















