ஜார்ஜ் டவுன்:
பேஸ்புக் விளம்பரத்துடன் தொடர்புடைய ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கி 60 வயதான பெண் நிதி அதிகாரி ஒருவர் RM4.17 மில்லியனை இழந்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில், பாதிக்கப்பட்டவர் பேஸ்புக்கில் KKR இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் ஒரு முதலீட்டிற்கான விளம்பரத்தைக் கண்டதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ கமிஷனர் ஹம்சா அகமட் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர் விளம்பரத்தில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து வாட்ஸ்அப் மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டார்.
பின்னர் பாதிக்கப்பட்டவர் ‘கும்புலன் அனாலிசிஸ் கெவாங்கன் சஹாம் மலேசியா’ என்ற வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டார்,” என்று அவர் புதன்கிழமை (ஜூன் 25) வெளியிட்டுளொ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குறுகிய காலத்திற்குள் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தினை அடிப்படையாகக் கொண்டு லாபகரமான வருமானத்தை முதலீடு செய்வதாக உறுதியளித்ததாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் அந்த முதலீட்டில் சேர ஆர்வமாக இருப்பதாகவும், வழங்கப்பட்ட இணைப்பு மூலம் KKR INV என்ற விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, உறுப்பினராகப் பதிவு செய்து, முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மார்ச் 10 முதல் ஜூன் 13 வரை, பாதிக்கப்பட்டவர் எட்டு வெவ்வேறு நிறுவன வங்கிக் கணக்குகளில் 76 பரிவர்த்தனைகளைச் செய்தார், இதன் மதிப்பு RM4.17 மில்லியன் ஆகும்.
பின்னர் தனது பணத்தை விலக்க முடியாதபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்ட பெண் உணர்ந்தார்” என்று அவர் கூறினார்.





















