தெலிமோங் தோட்டத்தில் பனை ஓலைகளுக்கு அடியில் பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுப்பு

குவந்தான்:

தெலிமோங்கின் ஜாலான் காராக்- கோலா பிலா, பத்து 19 இல் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று திங்கள்கிழமை (நவம்பர் 3) ஒரு பெண்ணின் சிதைந்த உடல் செம்பனை பனை ஓலைகளின் குவியலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டது.

ஆடவரின் சடலம் இருப்பது தொடர்பாக பொதுமக்களில் ஒருவரிடமிருந்து மாலை 5 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்தது என்று,
பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.

“சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகளில், குறித்த சடல।ம் ஒரு பெண்ணினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது, ஆனால் அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று சொன்னார்.

“பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமானது என்று நம்பப்படும் பல பொருட்களும் சம்பவ இடத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டன, அவற்றில் கருப்பு ஹூட் ஸ்வெட்சர்ட், பச்சை நிற ஸ்போர்ட்ஸ் கால்சட்டை, கேசியோ கைக்கடிகாரம் மற்றும் ஒரு ஜோடி கருப்பு செருப்புகள் ஆகியவை அடங்கும்,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சடலம் இங்குள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக யஹாயா கூறினார்.

பிரேத பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here