தாய்லாந்து – கம்போடியா எல்லையில் பதட்டம்: வெடித்தது ராணுவ மோதல்!

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், இன்று வியாழக்கிழமை (ஜூலை 24) அதிகாலை ஆயுத மோதல் வெடித்தது. இது குறித்து இரு நாடுகளின் ராணுவங்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளன.

டா மோன் தாம் கோயிலுக்கு அருகில் கம்போடியப் படைகள் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகத் தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது. கம்போடியா, கண்காணிப்பு வானூர்தியைப் பயன்படுத்திய பின்னர் கனரக ஆயுதங்களுடன் படைகளை அந்தப் பகுதியில் முனையம் செய்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தாய்லாந்து படைகள் அத்துமீறல் மேற்கொண்டதாகக் கம்போடியத் தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். கம்போடியப் படைகள் தற்காப்புக்காகவே பதிலடி கொடுத்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.

கம்போடியாவுக்கான தனது தூதரை ஜூலை 23ஆம் தேதி தாய்லாந்து திரும்ப அழைத்த பின்னரும், ஒரு வாரத்திற்குள் சர்ச்சைக்குரிய பகுதியில் இரண்டாவது தாய்லாந்து ராணுவ வீரர் கண்ணிவெடியால் ஒரு காலை இழந்ததைத் தொடர்ந்து, பேங்காக்கில் உள்ள கம்போடியத் தூதரை வெளியேற்றுவதாக அது கூறிய பின்னரும் இந்த மோதல் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here