அரசு ஓய்வூதியத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை – பொது சேவைத் துறை வலியுறுத்தல்

கோலாலம்பூர்,

அரசின் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டது என்ற சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என மலேசியா பொது சேவைத் துறை (PSD) இன்று வெளியிட்ட அறிக்கையில் திட்டவட்டமாக மறுத்தது.

துறை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பணியாற்றும் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

“ஓய்வூதியத்துடன் தொடர்புடைய எந்த தகவலும் அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவே உறுதிப்படுத்தப்பட வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் முக்கியமாக, பொய்யான தகவல்களை பரப்புவது 1998ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் (அத்தியாயம் 233) படி குற்றமாகும் எனவும் மக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில், ஓய்வூதிய பிரிவு மற்றும் ஓய்வூதிய நிதி நிறுவனம் (KWAP) ஆகியனவும் அந்த தகவல்களில் எதுவும் தங்களிடமிருந்து வெளியிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here