கோலாலம்பூர்- குளுவாங் ETS3 மின்சார ரயில் சேவை; பேரரசர் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தார்

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் தெற்கு வழித்தடத்திற்கான KTMB மின்சார ரயில் சேவையான ETS3 இன் சோதனை ஓட்டத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

காலை 7.45 மணிக்கு நிலையத்திற்கு வந்த பேரரசரை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், துணை அமைச்சர் ஹஸ்பி ஹபிபுல்லா மற்றும் அரசாங்கத்தின் தலைமை செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோர் வரவேற்றனர்.

அதன் பின்னர், ஜோகூரில் உள்ள குளுவாங்கிற்கு பயணம் செய்வதற்காக, மணிக்கு 140 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய ETS3 ரயிலின் கட்டுப்பாட்டை சுல்தான் இப்ராஹிம் சுமார் 30 நிமிடங்கள் இயக்கினார். அவருடன் லோக், சம்சுல், அஸ்ரி மற்றும் போக்குவரத்து துறை முன்னாள் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஜனா சந்திரன் முனியன் ஆகியோரும் உடனிருந்தனர்.

குளுவாங்கிற்கு வந்த பிறகு, சுல்தான் இப்ராஹிம், ஜெமாஸ்-ஜோகூர் பாரு மின்சார இரட்டைப் பாதைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.8 கி.மீ பொது பூங்காவான மஹ்கோட்டா ரயில் பூங்காவைத் திறந்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here