கோலாலம்பூர்:
அரசியல் நடவடிக்கைகளுக்கு அரசு நிதியைப் பயன்படுத்தப் போவதில்லை என்று DAP பொதுச் செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக் (Anthony Loke) உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் அனைத்து நிதியும் மக்களுக்குச் சொந்தமானது என்றும், அது தேசிய வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈப்போவில் நடைபெற்ற ஒரு நிதி திரட்டும் இரவு விருந்தில் பேசிய அவர், கட்சி உறுப்பினர்களின் பலமான ஆதரவு, டிக்கெட் விற்பனையின் மூலம் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இது, கட்சியின் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, DAP, கட்சி மற்றும் அரசாங்க விஷயங்களைப் பிரித்து வைத்திருக்கிறது என்று மீண்டும் வலியுறுத்திய அந்தோனி லோக், பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், மக்களின் சுமையைக் குறைப்பதிலும், மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது என்றும் கூறினார்.





















