சபா மாநிலத் தேர்தல்: வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் கவனம் செலுத்துவோம் – அகமட் ஸாஹிட் ஹமிடி!

கோலாலம்பூர்:

எதிர்வரும் சபா மாநிலத் தேர்தலில், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில், பாரிசான் நேஷனல் (BN) கவனம் செலுத்தும் என, அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி (Datuk Seri Ahmad Zahid Hamidi) தெரிவித்துள்ளார். பக்காத்தான் ஹரப்பான் (PH) உடன், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்ட நிலையில், கபாபுங்கான் ரக்யாட் சபா கட்சி GRS உடன், பேச்சுவார்த்தைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

இருப்பினும், பக்காத்தான் ஹரப்பான் – கபாபுங்கான் ரக்யாட் சபா கூட்டணியை, பாரிசான் நேஷனல் மதிப்பதாக அகமட் ஸாஹிட் கூறினார்.

பாரிசான் நேஷனலின் முக்கிய நோக்கம், தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் என்றும், கபாபுங்கான் ரக்யாட் சபாவுடன் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும், பாரிசான் நேஷனல் தனது ‘தாச்சிங்’ (dacing) சின்னத்தைப் பயன்படுத்தும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். பிபிஎஸ் (PBS) மற்றும் ஸ்டார் (STAR) கட்சிகள், பாரிசான் நேஷனல் அல்லது அம்னோவுடன் (UMNO) கூட்டணி அமைக்க மறுத்து, கபாபுங்கான் ரக்யாட் சபா கூட்டணியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here