ரவூப் பகுதியில் பெரும் புயல் : எட்டு வீடுகள் சேதம்

குவாந்தான்:

நேற்று பிற்பகல் ரவூப் மாவட்டத்தில் பெய்த கன மழை மற்றும் புயல் காரணமாக அங்கு பல வீடுகள் சேதமடைந்தன.

நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஏற்பட்ட புயல் காரணமாக காம்போங் மலாய் செம்பாலிட், தாமான் அமலினா லெஸ்தாரி மற்றும் ஜாலான் லிப்பிஸ் ஆகிய பகுதிகளில் உள்ள எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டன என்று, ரவூப் சிவில் பாதுகாப்புத் துறை (APM) அதிகாரி கேப்டன் (PA) சமஸுத்தீன் கம்படே தெரிவித்தார்.

மேலும் “பலத்த காற்றால் வீடுகளின் கூரைகள், படுக்கையறைகள் மற்றும் சமையலறைகள் சேதமடைந்தன. எனினும், உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இரவு 10 மணி நிலவரப்படி எட்டு வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், சம்பவ இடத்துக்கு ராவ் APM சென்று தகவல் சேகரித்து, உணவுப் பொதிகளை வழங்கி, சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது என்றும்,” அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here