வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 18 பேர் காயம்

காஜாங் :

வடக்கு–தெற்கு விரைவுச்சாலையின் 293.4 கிலோமீட்டர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில், 59 வயது நபர் உயிரிழந்தார்.

அதிகாலை 2.57 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஒரு மீட்பு குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு உதவி இயக்குநர் அமாட் முக்கிலிஸ் மொக்தார் தெரிவித்தார்.

“விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த விரைவுப் பேருந்து நெடுஞ்சாலையின் அடையாளக் கம்பத்தில் மோதியது. குறித்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 19 பேர் பயணம் செய்தனர்.”

அதிகாலை 3.48 மணிக்கு பேருந்துக்குள் சிக்கியிருந்த மூன்று பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மீதமுள்ள பயணிகள், தீயணைப்புக் குழு வருவதற்கு முன்பே பேருந்திலிருந்து தாங்களே வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பதினேழு பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே அவசர மருத்துவக் குழுவினரால் முதலுதவி சிகிச்சை பெற்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here