பாயன் லெப்பாஸில் பூட்டிய வீட்டிற்குள்ளிலிருந்து ஆடவர் ஒருவர் சடலமாக மீட்பு

பாயன் லெப்பாஸ்:

இன்று மாலை லெபுஹ் ரெலாவ், தாமான் தேசா ரெலாவ் பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டிற்குள், 45 வயது ஆண் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

மரணமடைந்தவர் சிங் வெங் யின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாடுகள் மற்றும் மீட்பு உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இன்று மாலை 5.44 மணியளவில் அந்த வீட்டின் கதவைத் திறக்க உதவி கோரி தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்தது.

“தீயணைப்பு வீரர்கள் கதவை திறந்தபோது, ஒரு நபர் மயக்க நிலையில் காணப்பட்டார். பின்னர் மருத்துவ அதிகாரிகள் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்,” என அவர் கூறினார்.

சடலம் பினாங்கு மருத்துவமனைக்கு (HPP) அனுப்பப்பட்டு, வழக்கு மேலதிக விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here