வேலையிடத்தில் மறந்து விட்டுவிட்டு வந்த குழந்தையின் பால் மாவை எடுக்க சென்ற ஆடவர் டிப்பர் லோரியில் மோதி மரணம்

கோலாலம்பூர்:

நேற்று இரவு பத்துமலை நோக்கிச் செல்லும் MRR2 இல், தனது குழந்தையின் பால் மாவை எடுக்க தனது பணியிடத்திற்குத் திரும்பிய தந்தை சாலை விபத்தில் பலியானார்.

நேற்று இரவு 8.20 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஹோண்டா RS150 மோட்டார் சைக்கிள் மற்றும் நிசான் டிப்பர் லோரி மோதியதாக ,நகர போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறையின் தலைமை துணை ஆணையர் முகமட் ஜம்சூரி முகமட் இசா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் டிப்பர் லோரியின் எஃகு பின்புற அச்சில் மோதியதாக நம்பப்படும்போது, ​​லோரி சாலையின் இடது பக்கத்தில் நின்றிருந்ததாகவும் அவர் கூறினார்.

“28 வயதான உள்ளூர்வாசியான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 39 வயதான லோரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக கோலாலம்பூர் (HKL) மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜம்சூரி கூறினார். இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரின் மனைவி சமூக ஊடகங்களில் தனது கணவர் அன்று மாலை ஏற்கனவே வீடு திரும்பியதாகவும், ஆனால் அவர் வேலையிடத்தில் மறந்துவிட்ட குழந்தையின் பால் மாவது எடுப்பதற்காக வேலைக்குச் செல்ல முடிவு செய்ததாகவும், இந்த சோகம் இன்னும் மனவேதனையை ஏற்படுத்துவதாகவும் பதிவிட்டிருந்தார்.

செல்வதற்கு முன், தனது கணவர் இரவு உணவவு சமைக்கச் சொன்னதாக அவர் கூறினார் மேலும் “என் கணவர் வேலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் இறந்துவிட்டதால் அவருக்கு சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை,” என்று அவர் எழுதியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here