சபா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை நள்ளிரவு 12 மணிக்குள் அறிவிக்கப்படலாம்

கோலாலம்பூர்:

நாளை (சனிக்கிழமை) நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் நாளை நள்ளிரவு 12 மணிக்குள் முழுதும் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் (SPR) எதிர்பார்க்கிறது என்று, அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹாருன் தெரிவித்துள்ளார்.

சபா மாநிலத்திற்கான இந்த முக்கியமான தேர்தலில் மொத்தம் 73 தொகுதிகள் உள்ளன. வாக்களிப்பு நிறைவுற்ற பின்னர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நேரம், குறிப்பாக வானிலை நிலைமையையும், புவியியல் சவால்களையும் பொறுத்தே இருக்கும் என அவர் கூறினார்.

சபாவின் பல பகுதிகளில் செங்குத்தான மலைப்பாங்கான நிலப்பரப்பு, அடர்ந்த காடு, மற்றும் அணுகமுடியாத கிராமங்கள் இருப்பதால், வாக்குப் பெட்டிகளை சேகரித்து எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரும் பணியில் சிறப்பு போக்குவரத்து வசதிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

“வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக மற்றும் விரைவாகக் கொண்டு வருவதற்கு, ஹெலிகாப்டர்கள், இயந்திரப் படகுகள், ஜீப் வண்டிகள் போன்ற உள்கட்டமைப்புகள் அனைத்தும் தயாராக உள்ளன. வானிலை காரணமாக சிறிய தாமதங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கலாம்; இருப்பினும் முடிவுகளை நள்ளிரவுக்குள் அறிவிக்க நம்பிக்கை உள்ளோம்” என்று, ரம்லான் ஹாருன் கூறினார்.

சபா மாநில தேர்தல் முடிவுகள் தேசிய அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால், அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்கள் இருவரும் முழு கவனத்துடன் அதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here