கோலாலம்பூர், ஜனவரி 30:
பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலைக்குச் செல்லும் ரத ஊர்வலத்திற்காகக் கோலாலம்பூரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இன்று (வெள்ளிக்கிழமை – ஜனவரி 30) இரவு 9.00 மணி முதல் பிப்ரவரி 2 (செவ்வாய்க்கிழமை) வரை கட்டம் கட்டமாகச் சாலைகள் மூடப்படும்.
ஜாலான் லெபோ அம்பாங் / ஜாலான் பேராக் (Jalan Leboh Ampang/Jalan Perak), ஜாலான் துன் பேராக் / ஜாலான் புடு (Jalan Tun Perak/Jalan Pudu), ஜாலான் துன் டான் செங் லொக் / ஜாலான் சுல்தான், ஜாலான் சுல்தான் / ஜாலான் ஹேங் ஜெபாட், ஜாலான் சுல்தான் / ஜாலான் பெட்டாலிங், ஜாலான் சுல்தான் / ஜாலான் துன் எச்.எஸ். லீ (Jalan Tun H.S. Lee), ஜாலான் முன்ஷி அப்துல்லா / ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் ராஜா லாவுட் / ஜாலான் சுல்தான் இஸ்மாயில் ஆகிய சாலைகள் கட்டம் கட்டமாகச் சாலைகள் மூடப்படும்.
இன்று இரவு 9.00 மணிக்கு ஜாலான் துன் எச்.எஸ். லீ-யிலிருந்து புறப்பட்டு பத்துமலை நோக்கிச் செல்லும். பிப்ரவரி 2-ஆம் தேதி மாலை 3.00 மணிக்கு பத்துமலையிலிருந்து புறப்பட்டு, பிப்ரவரி 3-ஆம் தேதி அதிகாலை 4.00 மணியளவில் மீண்டும் மாரியம்மன் ஆலயத்தைச் சென்றடையும்.
கோலாலம்பூர் போக்குவரத்துப் புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு (JSPT) தலைவர் ஏசிபி முகமட் ஜம்சுரி முகமட் ஈசா கூறுகையில்: பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். போக்குவரத்துப் போலீசாரின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முடிந்தவரை கேடிஎம் (KTM) கொமுட்டர் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது சிறந்தது.




















