ஜின்ஜாங்கில் ATM இயந்திரங்கள் சேதம்: மர்ம நபரைத் தேடும் காவல்துறை

கோலாலம்பூர்:

ஜின்ஜாங் (Jinjang) பகுதியில் உள்ள ஏடிஎம் (ATM) இயந்திரங்களைச் சேதப்படுத்திய மர்ம நபர் ஒருவரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

இந்தச் சம்பவத்தால் சுமார் RM64,000 மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்று, செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் பஸ்ரி சகோனி இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி காலை 8.40 மணியளவில், Maybank ஜின்ஜாங் செலாத்தான் கிளையைச் சேர்ந்த 38 வயதுடைய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, வங்கியின் நான்கு ATM இயந்திரங்களின் திரைகள் (Screens) உடைக்கப்பட்டிருப்பதை அவர் கண்டறிந்தார்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இந்தச் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, சம்பந்தப்பட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here