ஏப்ரல் 11 முதல் 27 வரை அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடு அமல்

கோலாலம்பூர் , மார்ச் 11 :

வரவிருக்கும் ஹரி ராயா ஐடில்பித்ரி (Hari Raya Aidilfitri) கொண்டாட்டத்தை முன்னிட்டு, சனிக்கிழமை முதல் 27 வரை அத்தியாவசியப் பொருட்கள் ‘பண்டிகைக் கால உச்ச வரம்பு விலை திட்டத்தின்’ கீழ் கொண்டு வரப்பட உள்ளன.

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி கூறுகையில், இந்தத் திட்டம் மார்ச் 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்தார்.

இது ஹரி ராயாவுக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகத் தொடங்கி, பண்டிகை நாளையும் சேர்த்து, அதற்கு அடுத்த ஏழு நாட்கள் வரை நீடிக்கும் என்றார்.

இந்த ஆண்டு பெரும்பாலான பொருட்களின் உச்ச வரம்பு விலையை அரசாங்கம் குறைத்துள்ளது. ஒரு சில பொருட்களின் விலை மட்டுமே விநியோகப் பற்றாக்குறை மற்றும் வானிலை காரணங்களால் சற்று உயர்ந்துள்ளது.

இதில் கட்டுப்பாட்டில் உள்ள 27 பொருட்களையும் வியாபாரிகள் இளஞ்சிவப்பு நிற விலைப்பட்டியலில் அடையாளப்படுத்த வேண்டும். இது குறித்து அமலாக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, நுகர்வோர் சுமையைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 27 முக்கிய பொருட்களாக,
பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, காய்ந்த மிளகாய், சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சி, முட்டைக்கோஸ், கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், பயறு வகைகள் மற்றும் உருளைக்கிழங்கு. மற்றும் கடல் உணவுகள்: இந்திய மெக்கரல் (Ikan Kembung/Mabung) மற்றும் ஸ்கேட் மெக்கரல் (Ikan Selayang). சில குறிப்பிட்ட மாநிலங்களில் டூனா மற்றும் பிற மீன் வகைகளுக்கும் கட்டுப்பாடு உண்டு. மேலும் இறைச்சி: இறக்குமதி செய்யப்பட்ட எருமை இறைச்சி (இந்தியா), சரவாக்கில் இறக்குமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் சபா, சரவாக் பகுதிகளில் கோழி இறக்கைகள் (Chicken wings).
அத்தோடு தேங்காய் பொருட்கள்: தேங்காய் துருவல் மற்றும் தேங்காய் பால் (சில்லறை விற்பனை அளவில்) என்பன அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here