கோலாலம்பூர் | மார்ச் 12, 2026:
கடந்த மாதம் செராஸ், தாமான் மிடா (Taman Midah) பகுதியில் ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
27 மற்றும் 28 வயதுடைய இரண்டு ஆண்கள் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சேராஸ் பகுதியில் கைது செய்யப்பட்டனர் என்று, செராஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ரோஸ்டி தாவுட் கூறினார்.
குற்றச் செயலின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சில பொருட்களையும் போலீசார் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க ஸ்பெயின் நாட்டுப் பெண். இந்த வழிப்பறிச் சம்பவம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி மதியம் 1:59 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
வழிப்பறியின் போது கீழே தள்ளப்பட்டதில் அந்தப் பெண்ணின் முழங்கால், தோள்பட்டை மற்றும் இடது கையில் மென்மையான தசை திசுக்களில் (Soft tissue) காயங்கள் ஏற்பட்டன. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவத்தில் சுமார் 2,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களை அவர் இழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 394-ன் கீழ் (கொள்ளையடிக்கும் போது வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல்) விசாரிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்கு உதவும் வகையில் நாளை வரை போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்.





















