கோலாலம்பூர் | மார்ச் 14, 2026:
மலேசியாவின் பினாங்கு, பேராக், பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களில் இன்று நண்பகல் 12:00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பினாங்கு (Penang): பாராட் டயா (Barat Daya) மற்றும் திமூர் லாவுட் (Timur Laut), பேராக் (Perak): கிரியான் (Kerian), லாரூட், மாடாங் மற்றும் செலாமா (Larut, Matang & Selama), மஞ்சுங் (Manjung), பாகன் டத்தோ (Bagan Datuk) மற்றும் ஹிலீர் பேராக் (Hilir Perak), பகாங் (Pahang): குவாந்தான் (Kuantan) மற்றும் பெக்கான் (Pekan) மற்றும் சிலாங்கூர் (Selangor): சபாக் பெர்னாம் (Sabak Bernam)ஆகிய இடங்கள் இந்த வானிலையை எதிர்கொள்ளும்.
தற்போது மலேசியாவில் நிலவும் பருவமழை மாற்றங்கள் மற்றும் வளிமண்டல அழுத்தங்கள் காரணமாக இந்தத் திடீர் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் மீனவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




















