ஜோகூர் சாலை பாதுகாப்பு: நோன்புப் பெருநாளை முன்னிட்டு தீவிரக் கண்காணிப்பு

ஜோகூர் பாரு, மார்ச் 19, 2026:

எதிர்வரும் நோன்புப் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு, சாலை விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைக்கும் நோக்கில் ஜோகூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ஒரு மாபெரும் அமலாக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

சாலைப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள 33 விபத்துப் பகுதி (Blackspots) தீவிரமாகக் கண்காணிக்கப்பட உள்ளன.

மார்ச் 16 முதல் மார்ச் 29 வரை இந்தச் சிறப்பு நடவடிக்கை தொடரும் என்றும், சுமார் 300 அதிகாரிகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், விதிமீறல்களைத் துல்லியமாகப் பதிவு செய்யவும் அதிகாரிகள் தங்களின் சீருடையில் கேமராக்களை (Body-worn cameras) பொருத்தியுள்ளனர்.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பிற்காக, பேருந்து முனையங்களில் 15 அதிகாரிகள் சிறப்பாக நியமிக்கப்பட்டு சோதனைகளை மேற்கொள்கின்றனர்.

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாகச் செல்லுதல், வாகனம் ஓட்டும்போது தொலைபேசி பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது, பாதுகாப்பு உபகரணங்கள்: இருக்கைவார் (Seatbelt) அணியாதது மற்றும் தலைக்கவசம் (Helmet) அணியாதது, நெரிசலை மீறுதல்: வரிசையில் நிற்காமல் மற்ற வாகனங்களை முந்திச் செல்வது, தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக ஓய்வின்றி வாகனம் ஓட்டுவது ஆகிய உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் குறித்து சிறப்பு அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்:

மார்ச் 16 – 18 ஆம் தேதிவரை நடவடிக்கை தொடங்கிய முதல் மூன்று நாட்களிலேயே அதிகாரிகள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர்:

மாநிலம் முழுவதும் மொத்தம் 29,692 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. விதிமுறைகளை மீறிய 2,510 வாகன ஓட்டுநர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 18ஆம் தேதி நடந்த சோதனையில், வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் 80 பேர் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here