“வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் தருவேன்!” – தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்துச் சீமான் அதிரடிப் பேச்சு

காரைக்குடி | ஏப்ரல் 1, 2026

மற்ற கட்சிகள் கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளை வெளியிடுவதைப் போல, எங்களாலும் “வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம்” என வாக்குறுதிகளை அள்ளி வீச முடியும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், காதில் தேன் ஊற்றுவது போன்ற இனிமையான பொய் வாக்குறுதிகளைப் பிற கட்சிகள் அளித்து வருகின்றன. சில கட்சிகள் இலவச எரிவாயு உருளைகள் மற்றும் பெண்களுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்குவதாகக் கூறுகின்றன. அந்த வரிசையில் எங்களாலும் ஹெலிகாப்டர் மற்றும் தங்கம் தருவதாகச் சொல்ல முடியும் என அவர் சாடினார்.

வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை மற்றும் லட்சக்கணக்கில் கல்விக்கடன் தருவதாகக் கூறுவதற்குப் பதில், தரமான இலவசக் கல்வி நிலையங்களை அரசே ஏன் உருவாக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாமல், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என அவர் திட்டவட்டமாகக் கூறினார். மதுக்கடைகளை மூடுவது குறித்து எந்தக் கட்சியும் பேசுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து அவர் கூறியதாவது:

வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்கள் என அனைத்திலும் தமிழில்தான் பெயர்ப்பலகைகள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

பொதுத் தளங்களில் தமிழில்தான் பேச வேண்டும் என்ற விதியை உறுதிப்படுத்துவோம் என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here