நாட்டின் 8 மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூர், புத்ராஜெயாவில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை – மெட்மலேசியா எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் நாட்டின் எட்டு மாநிலங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, பின்வரும் பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது: சிலாங்கூரின் உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங், பேராக்கின் லாருட், மாடாங் மற்றும் செலாமா, கோலாகங்சார், கிந்தா, கம்பார், பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் மற்றும் பகாங்கின் கேமரன் மலை, லிப்பிஸ், ரவுப், பெந்தோங், பேரா மற்றும் ரொம்பின்.

நெகிரி செம்பிலானின் ஜெலுபு, சிரம்பான், போர்ட்டிக்சன், ஜெம்போல் மற்றும் தம்பின் மற்றும் மலாக்காவின் மலாக்கா தெங்கா மற்றும் ஜாசின், ஜோகூரின் தங்காக், சிகாமாட், மூவார், பத்து பகாட் மற்றும் பொந்தியான், சரவாக்கின் கூச்சிங் மற்றும் செரியான் மற்றும் சபா: உட்பகுதிகள் (கோலா பென்யு, பியூஃபோர்ட்), மேற்குக்கரை (பாப்பார், புத்தாத்தான், பெனாம்பாங், கோத்தா கினபாலு, துவாரான், கோத்தா பெலுட்) மற்றும் கூடாட் (கோத்தா மருடு) ஆகிய இடங்கள் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

பலத்த காற்றினால் மரங்கள் விழுவது அல்லது திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வானிலை குறித்த உடனுக்குடன் தகவல்களை அறிய மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பார்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here