தினமும் நரசிம்ம கவசம் படித்தால்…

நரசிம்ம கவசம் என்பது பிரஹலாதனால், நரசிம்மரின் அருளை வேண்டி பாடப்பட்ட பாதுகாப்பு மந்திரமாகும். இது பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நரசிம்மர், இரண்யனிடம் இருந்து தனது பக்தனான பிரஹலாதனை காத்தது போல் இந்த கவசத்தை படித்தால், தீய சக்திகள், எதிரிகள், பயம், ஆபத்து ஆகியவற்றில் இருந்து நம்மையும் காப்பாற்றுவார் என நம்பப்படுகிறது. இது ஒருவரின் வாழ்க்கையை மாற்றக் கூடிய சக்தி வாய்ந்தது. ஆபத்து ஏற்படும் போது, நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்னும் போது அல்லது தினமும் நரசிம்ம கவசத்தை படித்தால் கேட்டது கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

நரசிம்மர், இரண்யனை வதம் செய்த பிறகும் உக்கிரம் தணியாமல் இருந்தார். இதனால் அவருக்கு அருகில் செல்வதற்கே அனைவரும் பயந்து நடுங்கினர். அப்போது நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை தணிக்கவும், அவரின் கருணை நிறைந்த அருளையும், பயத்தில் இருந்து விடுதலையையும் பெறுவதற்காக பிரஹலாதன் பாடியது தான் நரசிம்ம கவசம் என சொல்லப்படுகிறது. இந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லும் நரசிம்மரின் பெருமைகளை சொல்லி போற்றுவதாகும். அவரின் அருள் கிடைக்க வேண்டும் என்பதை கேட்பதாகும்.

1. எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு – நரசிம்ம கவசத்தை தினமும் படித்து வந்தால் தீய சக்திகள், எதிரிகள், பயம் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். தீயசக்திகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட இது கவசமாக இருந்து காக்கும்.

2. கிரக குறைபாடுகளில் பாதுகாப்பு – வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி, ராகு, செவ்வாய் கிரகங்களில் தீய விளைவுகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நரசிம்ம கவசத்தை தினமும் படிக்கலாம். கண் திருஷ்டி பாதிப்பு, கடுமையாக உழைத்து கடைசி நிமிடத்தில் தோல்வி ஏற்படுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கவசத்தை படிப்பதால் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து விடுபட முடியும்.

3. மனஅமைதி, தன்னம்பிக்கை கிடைக்க – நரசிம்ம கவசத்தில் உள்ள அதிர்வுகளும் மந்திரங்களின் ஆற்றலும் ஒருவரின் மனதை அமைதிப்படுத்தி, அவரது மன வலிமையை அதிகரிக்க செய்யும். இதை விடாமல் தினமும் உச்சரித்து வந்தால் பயம் நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். இதை வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க வழிகாட்டும்.

4. ஆயுள், ஆரோக்கியம் – நரசிம்ம கவசத்தின் ஒவ்வொரு ஸ்லோகமும், உடலின் வெவ்வேறு பாகங்களை பாதுகாப்பதற்கான மந்திர சொற்களால் அமைந்துள்ளது. முழு நம்பிக்கையுடன் தினமும் நரசிம்ம கவசத்தை உச்சரித்து வந்தால் கொடிய நோய்களில் இருந்து விடுபடுவதுடன் ஆரோக்கியமும், ஆயுள் விருத்தியும் பெற முடியும். இந்த மந்திரம் மனதையும், ஆத்மாவையும் சுத்தப்படுத்தக் கூடியதாகும்.

ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹலாத நோதிதம் புரா
ஸர்வ ரக்ஷாகரம் புண்யம் ஸர்வோபத்ரவ நாஸனம்

ஸர்வ ஸம்பத்கரம் சைவ ஸ்வர்க்க மோக்ஷ ப்ரதாயகம்
த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேஸம் ஹேம ஸிம்ஹாஸனஸ்த்திதம்

விவ்ருதாஸ்யம் த்ரிநயனம் ஸரதிந்து ஸமப்ரபம்
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் விபூதிபி: உபாஸ்ரிதம்

ஸதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ண குண்டல ஸோபிதம்
ஸரோஜ ஸோபிதோரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம்

தப்த காஞ்ஜன ஸங்காஸம் பீத நிர்மல வாஸஸம்
இந்த்ராதி ஸுரமௌளிஸ்தஸ்ஃபுரன் மாணிக்ய தீப்திபி:

விராஜித பத த்வந்த்வம் ஸங்கசக்ராதி ஹேதிபி:
க்ருத்மதா ஸ வினயம் ஸ்தூயமானம் முதா$ன்விதம்

ஸ்வஹ்ருத் கமல ஸம்வாஸம் க்ருத்வா து கவசம் படேத்
ந்ருஸிம்ஹோ மே த்ருஸௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன:

ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரிர் முனிவர்ய ஸ்துதி ப்ரிய:
நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய:

ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம
வக்த்ரம் பாத்விந்து வதன: ஸதா ப்ரஹலாத வந்தித:

ந்ருஸிம்ஹ: பாது மே கண்ட்டம் ஸ்கந்தௌ பூபரணாந்த க்ருத்
திவ்யாஸ்த்ர ஸோபித புஜோ ந்ருஸிம்ஹ: பாதுமே புஜௌ

கரௌ மே தேவ வரதோ ந்ருஸிம்ஹ: பாது ஸர்வத:
ஹ்ருதயம் யோகி ஸாத்யஸ் ச நிவாஸம் பாது மே ஹரி:

மத்யம் பாது ஹிரண்யாக்ஷ வக்ஷ: குக்ஷி விதாரண:
நாபிம் மே பாது ந்ருஹரி: ஸ்வநாபி ப்ரஹ்ம ஸம்ஸ்துத:

ப்ரஹ்மாண்ட கோடய: கட்யாம் யஸ்யாஸௌ பாது மே கடிம்
குஹ்யம் மே பாது குஹ்யானாம் மந்த்ராணாம் குஹ்யரூப த்ருக்

ஊரூ மனோபவ: பாது ஜானூநீ நரரூப த்ருக்
ஜங்கே பாது தரா பாரா ஹர்த்தா யோ$ஸௌ ந்ருகேஸரீ

ஸுர ராஜ்ய ப்ரத: பாது பாதௌ மே ந்ருஹரீஸ்வர:

ஸஹஸ்ரஸீர்ஷா புருஷ: பாது மே ஸர்வஸஸ்தனும்

மஹோக்ர: பூர்வத: பாது மஹா வீராக்ரஜோ$க்னித:
மஹாவிஷ்ணுர் தக்ஷிணேது மஹா ஜ்வாலஸ்து நைர்ருதௌ

பஸ்சிமே பாது ஸர்வேஸா திஸி மே ஸர்வதோ முக:
ந்ருஸிம்ஹ: பாது வாயவ்யாம் ஸௌம்யாம் பூஷண விக்ரஹ:

ஈஸான்யாம் பாது பத்ரோ மே ஸர்வ மங்கள தாயக:
ஸம்ஸாராபயத: பாது ம்ருத்யோர் ம்ருத்யுர் ந்ருகேஸரீ

இதம் ந்ருஸிம்ஹ கவசம் ப்ரஹலாத முக மண்டிதம்
பக்திமான்ய: படேந் நித்யம் ஸர்வ பாபை: ப்ரமுச்யதே

புத்ரவான் தனவான் லோகே தீர்க்காயுருப ஜாயதே

யம் யம் காமயதே காமம் தம் தம் ப்ராப்னோத்ய ஸம்ஸயம்

ஸர்வத்ர ஜய மாப்னோதி ஸர்வத்ர விஜயீ பவேத்
பூம்யந்தரிக்ஷ திவ்யானாம் க்ரஹாணாம் விநிவாரணம்

வ்ருச்ஸிகோரக ஸம்பூத விஷாய ஹரணம் பரம்
ப்ரஹ்ம ராக்ஷஸ யக்ஷாணாம் தூரோத்ஸாரண காரணம்

பூர்ஜே வா தாளபத்ரே வா கவசம் லிகிதம் ஸுபம்
கரமூலே த்ருதம் யேன ஸித்யேயு: கர்ம ஸித்தய:

தேவாஸூர மனுஷ்யேஷூ ஸ்வம் ஸ்வமேவ ஜயம் லபேத்
ஏக ஸந்த்யம் த்ரி ஸந்த்யம் வா ய: படேந் நியதோ நர:

ஸர்வ மங்கள மாங்கல்யம் புக்திம் முக்திஞ்ச விந்ததி
த்வாத்ரிம்ஸச்ச ஸஹஸ்ராணி படேச் சுத்தாத்மனாம் ந்ருணாம்

கவசஸ்யாஸ்ய மந்த்ரஸ்ய மந்த்ரஸித்தி: ப்ரஜாயதே
அனேன மந்த்ர ராஜேன க்ருத்வா பஸ்மாபி மந்த்ரணம்

திலகம் வின்யஸேத்யஸ்து தஸ்ய க்ரஹ பயம் ஹரேத்
த்ரிவாரம் ஜபமானஸ்து தத்தம் வார்யபி மந்த்ரய ச

ப்ராஸயேத்யோ நரோ மந்த்ரம் ந்ருஸிம்ஹ ஸத்ருஸோ பவேத்
தஸ்ய ரோகா: ப்ரணஸ்யந்தி யே ச ஸ்யு: குக்ஷி ஸம்பவா:

கிமத்ர பஹூனோக்தேன ந்ருஸிம்ஹ ஸத்ருஸோ பவேத்
மனஸா ஸிந்திதம் யத்து ஸ தச்சாப்னோத்ய ஸம்ஸயம்

கர்ஜந்தம் கர்ஜயந்தம் நிஜ புஜ படலம் ஸ்ஃபோடயந்தம் ஹடந்தம்
ரூப்யந்தம் தாபயந்தம் திவி புவி திதிஜம் க்ஷேபயந்தம் க்ஷிபந்தம்

க்ரந்தந்தம் ரோஷயந்தம் திஸி திஸி ஸததம் ஸம்ஹரந்தம் பரந்தம்
வீக்ஷந்தம் கூர்ணயந்தம் ஸர நிகர ஸதை: திவ்ய ஸிம்ஹம் நமாமி

இதி ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணே
ஸ்ரீ ந்ருஸிம்ஹ கவசம் ஸம்பூர்ணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here