தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொடும்: யுபிஎஸ் வங்கி கணிப்பு!

கோலாலம்பூர்:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளால், தங்கம், வெள்ளியின் விலை இந்த ஆண்டு புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என்று சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் முதலீட்டு வங்கி கணித்துள்ளது.

இது குறித்து கருத்துரைத்த வங்கியின் மூலோபாய நிபுணர் ஜோனி டெவெஸ், பணவீக்கச் சூழலில் முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதால், அதன் விலை ஒரு அவுன்ஸ் 5,600 அமெரிக்க டாலர் வரை உயரும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், சீனாவிலும் இந்தியாவிலும் நிலவும் வலுவான தேவை மற்றும் விநியோகப் பற்றாக்குறை காரணமாக, வெள்ளியின் விலையும் தங்கம் விலைக்கு இணையாக உயர்ந்து அவுன்ஸ் ஒன்று 100 அமெரிக்க டாலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய விலைச்சரிவை முதலீட்டாளர்கள் ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்தித் தங்கள் கையிருப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றும், மத்திய வங்கிகளின் தொடர் கொள்முதல் விலையேற்றத்திற்குப் பெரும் பக்கபலமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here