சபாக் பெர்னாமில் இந்தோனேசியர்கள் கடத்தல்: 7 உள்ளூர் ஏஜெண்டுகள் உட்பட 35 பேர் அதிரடி கைது!

கோலாலம்பூர்:

சபாக் பெர்னாம், கம்போங் சுங்கை ஆயர் தாவார் பகுதியில், தலா RM1,500 முதல் RM2,000 வரை கட்டணம் பெற்றுக்கொண்டு இந்தோனேசியர்களை சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 7 உள்ளூர் ஏஜெண்டுகள் மற்றும் 28 இந்தோனேசியர்கள் பொதுப் பாதுகாப்புப் படையினரால் (PGA) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘ஒப் தாரிங் ஞா 1’ (Op Taring Nya 1) என்ற இந்தச் சிறப்பு நடவடிக்கை மூலம் இவர்களின் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 10 அன்று காலை 5 மணியளவில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 6 கார்கள் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் உட்பட RM360,000 மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பொதுப் பாதுகாப்புப் படையின் மத்திய பிரிகேட் தளபதி சீனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஹகேமால் ஹவாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here