கோலாலம்பூர்:
RON95 எரிபொருளுக்கான இலக்கிடப்பட்ட மானியத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த, பெட்ரோல் நிலையங்களில் பரிசோதனை முறைகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிஸான் தெரிவித்தார்.
“எரிபொருள் நிரப்பும் போது எப்படி எளிமையாக செயலில் ஈடுபடுகிறோமோ, அதேபோன்று மைகாட் (MyKad) வாயிலாக மானியத்திற்கு தகுதி பெற்றதை உறுதிப்படுத்தும் முறையும் எளிதாக இருக்க வேண்டும்,” என்று அவர் இன்று நடைபெற்ற Invest ASEAN – Malaysia Conference 2025 நிகழ்வில் கூறினார்.
அரசின் நோக்கம், RON95 மானிய திட்டம் செயல்படுத்தும் போது பொதுமக்கள் தற்போது அனுபவிக்கும் எளிமையையே தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்பதுதான் என அவர் வலியுறுத்தினார். “எரிபொருள் நிரப்பும் போது, மக்கள் மானியம் பெற வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையை தவிர்க்கவே இந்த புதிய முறை உருவாக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
அரசாங்கம், வருட முடிவிற்கு முன்னர் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இந்த மானிய மதிப்பீட்டு முறையை (MyKad வழியாக) நடைமுறைப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த வாரம், RON95 இலக்கிடப்பட்ட மானியம் கட்டுப்பாடு ஆண்டு முழுவதும் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், ஆனால் துல்லியமான தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், மலேசிய பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் (PDAM), RON95 மானிய குறைத்தல் திட்டத்தை தாமதிக்க அரசை வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர்Khairul Annuar Abdul Aziz கூறுகையில், விற்பனையாளர்களுக்கான நிகர இலாப வீதம் 2019 முதல் புதுப்பிக்கப்படாமல் உள்ளது என்றும், தற்போது நிலவும் வியாபார சலுகை வீதங்கள் (merchant discount rate) விற்பனையாளர்களை பாதிக்கின்றன என்றும் தெரிவித்தார்.





















