கோலாலம்பூர் :
இந்தியா தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தனத்தை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் இவ்வாறான நிகழ்வுகளுக்கு அரசு மரியாதை செலுத்தி வருகிறது. இதனிடையே உடல் உறுப்பு தானம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு துயரமான நிகழ்வு என்றாலும் அதைச் சுற்றி பல உணர்வுகள் இருக்கின்றன. ஒரு பக்கம் தங்கள் பிள்ளையின் உயிரை இழந்துவிட்ட பெற்றோரின் சோகம். இன்னொரு பக்கம், அந்தப் பிள்ளையின் உறுப்புகள் மற்றவர்களுக்குப் புது வாழ்வு அளிக்கப் போகின்றன என்கிற நம்பிக்கை. இந்த உணர்வுகள் அனைத்தும் கலந்த ஒரு காட்சிதான் இந்த காணொளி.
வீடியோவில், ஒரு மருத்துவமனை ஊழியர், ஒரு நீல நிற கோல்மன் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, வேகமாக வெளியே செல்கிறார். அந்தப் பெட்டிக்குள் இருக்கும் உறுப்புகள், இன்னொருவருக்குப் பொருத்தப்படப் போகின்றன. அந்த ஊழியரைச் சூழ்ந்து பெற்றோர்கள், உறவினர்கள் என ஒரு கூட்டம் கண்ணீருடன் நிற்கிறது. அவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்த, கைகளைக் கூப்பி அந்த ஊழியருக்கு வணக்கம் தெரிவிக்கிறார்கள். இந்தக் காட்சி அவர்களின் துயரத்தையும், அதே நேரத்தில், தங்கள் பிள்ளையின் உறுப்பு மற்றவர்களை வாழவைக்கப் போகிறது என்கிற பெருமிதத்தையும் வெளிப்படுத்துகிறது.
இத்தகைய துயரமான நேரத்தில் கூட, மனிதநேயமும், இரக்கமும் எப்படி வெளிப்படுகின்றன என்பதற்கு இந்த காணொளி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த பெற்றோர் எடுத்த முடிவு, மற்றவர்களின் வாழ்வில் ஒரு புதிய ஒளியை ஏற்றியுள்ளது. இது, ஒரு மிகச் சிறந்த மனிதநேயப் பண்பு மட்டுமல்லாமல் பல உயிர்களை காக்கக்கூடிய செயலாகவும் பார்க்கப்படுகிறது.




















