திரெங்கானு: பெருநாள் கால போக்குவரத்து சோதனையில் 10 பேர் உயிரிழப்பு

கோலா திரெங்கானு | மார்ச் 29, 2026:

திரெங்கானு மாநிலத்தில் 14 நாட்கள் நடைபெற்ற ‘Ops HRA 2026’ போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கையின் போது 10 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதில் பலியான 10 பேரில் 7 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், மீதமுள்ள 3 பேர் கார் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் ஆவர்.

சாலைகள் நல்ல நிலையில் இருந்தபோதும், ஓட்டுநர்களின் அதிவேகம் மற்றும் கவனக்குறைவு காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் நடந்துள்ளன. சாலைக் கட்டமைப்பில் குறைபாடுகள் ஏதுமில்லை என திரெங்கானு சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) இயக்குநர் முகமது ஜம்ரி சமியோன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சோதனையின் போது விதிமீறல்களில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு மொத்தம் 2,116 அபராதச் சீட்டுகள் (Summonses) வழங்கப்பட்டுள்ளன.

1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் 16 கார்கள், 24 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 லாரிகள் என மொத்தம் 44 வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here