கோழி முந்தியா முட்டை முந்தியா? கொரோனாவின் பதில் !

கோழி முந்தியா முட்டை முந்தியா?

இக்கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது. என்ன பதில். யார் இந்த பதிலைச்சொன்னது. சொன்னவர் மகானா ? என்ற கேள்விகளும் கைவசமிருக்கின்றன என்பதும் தெரிந்ததுதான்.

கோழி முந்தியா? முட்டை முந்தியா? என்ற கேள்வியைக் கேட்டவர்கள் அனைவரும் புத்திசாலிகள் என்ற நினைப்பில், அடுத்து யாரையும் சிந்திக்க விடவில்லை. சிந்திக்க விட்டிருந்தால். அல்லது சிந்திக்க வழி வகுத்திருந்தால் பதில் எப்போதோ கிடைத்திருக்கும். அப்படி யாரும் செய்யவில்லை. செய்யவும் விடவில்லை. அதனால்தான் இன்றுவரை பதில் இருந்தும் தெரியாமல் இருந்திருக்கிறோமா?
உலகில், முதலில் தோன்றியது எது என்று தெரிந்தால்தான் இதற்கான விடையைப் புரிந்துகொள்ளமுடியும். ஆதலால் உலகில் முதலில் தோன்றியது எது என்று, அறிவுக்கு எட்டியவரை தேடுவோமே!

உலகில் முதலில் தோன்றியது கரப்பான் பூச்சி என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். இன்னும் சிலரோ எலி என்கிறார்கள். ஒவ்வொருவரின் அறிவாற்றலுக்கு ஏற்ப அலசுவதற்குப் பெயர்தான் தேடல். அந்தத் தேடலில் ஒரு துரும்புதான் கோழியா முட்டையா என்பதும்!

உயிர் தோன்றல் வரிசையில் நமக்குக் கிடைத்த தேடல் கோழி. இதைத்தான் கொஞ்சம் அலச முனைந்திருக்கிறோம். இதை உலகின் முதல் தோன்றல் என்பதாகக் கொள்ளல் கூடாது. மனித இனம்தான் முழுமையான படைப்பாக இருக்கமுடியும் என்கிறார்கள்.

முட்டையா கோழியா என்பதில் கோழிதான் முதலில் என்பதாகவே எடுத்துக்கொள்ளலாம். கோழி, முட்டை இடுகிறது என்றால் கோழிதான் அதைச்செய்திருக்கிறது .அதனால்தான் முட்டை கிடைத்திருக்கிறது. அப்படியானால் கோழி எப்படி வந்தது என்று கேட்கத் தெரியாதா என்ன?அதற்குமுன் கொரோனா பற்றிய புரிதல் இதற்கு உதவுமா என்பதையும் பார்ப்போமா!

கொரோனா புதிய கிருமியல்ல. இதற்குமுன்னும் கொரோனா குடும்பங்கள் வழித்தோன்றலாய் வந்திருக்கின்றன என்கிறார்கள். அதுதான் உண்மை என்றால் ஒருகிருமிவகையில் கோழியும் தோன்றியிருக்கவேண்டும். அந்தக் கிருமி கால ஓட்டத்தில் புழுவாகப்பரிணாமம் அடைந்திருக்க வேண்டும்.

சாதாரண மக்களுக்குப் புழு தோன்றிய வரலாற்றிலிருந்துதான் சில செய்திகள் தெரியும். ஓர் உயிர் அழிந்தபின் உடல் திசுக்கள் புழுவாகத்தான் மாறுகின்றன.அந்தப்புழுக்கள் ஒன்றையொன்று அழித்துக்கொண்டு, வேறாக உயிர்ப் பரிணாமம் அடைகின்றன. அந்த வகையில் ஒரு புழுதான் கோழியாகி இருக்கின்றது என்றால் அசைவர்கள் மறுப்பார்கள்.

இன்றைய கொரோனா அந்த வகையில் வந்த கிருமிதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள், கிருகிகளின் சேர்க்கையால் மற்றொன்ராய் மாற்றம் அடைந்கொண்டெ இருக்கும் . அந்த பரிணாம வளர்ச்சியின் முதிர்ச்சிக்கு காலம் இருக்கிறது. அந்த முதர்ச்சி மற்றொரு சேர்க்கையத்தேடி அலையும். உயிர்ப்பெருக்கம் செய்யப்போர் நடத்தும். அந்தப் போர் மனிதனுக்குபுரியும் போது தொற்று ஆகிவிடும்.

இதுதான் இன்றைய கொரோனா 19 ஆக இருக்கலாம் அல்லவா? உலகத்தி

ன் எல்லை வரை கிருமிகள் இருக்கும் . காலத்தால் மாறிக்கொண்டே இருக்கும் என்பதையும் மனிதன் ஆய்வு செய்திருக்கிறான். பல உண்மைகளை சுய நலத்தால் மறைத்தும் வைத்திருக்கிறான்.

இதற்கு இன்னுமொரு செய்தியும் கூறலாம். தலையில் முடி நடுவது பற்றியும் ஒரு மருத்துவர் சொன்ன தகவல் இது. மனிதனின் ஆயுள் ஏறக்குறைய நூறாண்டுகள். ஆதலால் தலைமுடி நடுதல் பற்றி மனிதன் கவலைப்படுவதில்லை. இதன் மறுபக்க உண்மை அதிர்ச்சியானது என்பதை அறியுமுன்னே மரணம் வந்துவிடுவதால் அது பற்றிய கவலை மனிதனுக்கு இருப்பதில்லை.

நடப்படுகின்ற தலைமுடி மனிதனிடமிருந்து கிடைப்பதாக இருக்காது. ஒர் ஆய்வில் தயாரிக்கப்படுவதாகவே இருக்கும். அதை நடும்போது சில நூற்றாண்டுகளுக்குபின் அந்த முடி எலி வால் போன்ற தடிமன் பெற்றுவிடும் என்கிறார் ஒரு மருத்துவர். அது உண்மையா இல்லையா என்று தெரிய வருமுன் அந்த மனிதன் இறந்துபோவான். அந்த உண்மை வெளியில் தெரியாமல் அழிந்துவிடும். இந்த உண்மை முடியை நடவு செய்யலாம் என்ற கண்டுபிடிப்பாளனுக்குத் தெரியும். ஆனால் சொல்வானா? வணிகம் தான் இந்த கொரோனா -19.

மனிதனுக்கு பல உண்மைகள் சொல்லப்படுவதில்லை. அதனால் தான் புழுவை கோழியாக்கி உண்கிறான் . உண்மை தெரியாமலேயே கோழியா முட்டையா என்று இன்று வரை மக்களை முட்டாள்களாக்கிக் கொன்டிருக்கிறான். உண்மை சொன்னால் புழுக்கள் கோழிகலான கதை தெரிந்துவிடும். அப்பாவி மனிதனும் புழுக்களைதின்று நோய் வாங்கிக் கொள்கிறான், விடைதெரியாமல் இருக்கிறான்.

ஒரு மகான் சொல்கிறார் இப்படி. மனிதன் நாட்டிலேயும் மிருகங்கள் காட்டிலேயும் இருந்தால் கொரோனா மட்டும் அல்ல, ஏதும் அண்டாது என்கிறான். பிரம்மாக்களை நம்புகின்ற மனிதன் பிரபஞ்சங்களை நம்ப மறுக்கிறான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here