வெள்ளக் காடானது லெபோ அம்பாங்

கோலாலம்பூர்: கோவிட்-19 தொற்றினால் வர்த்தகர்கள் வேதனையில் இருக்கும் இக்கால கட்டத்தில்  மழை நீர் அவர்களுக்கு கண்ணீரை வரவழைத்து இருப்பதாக  பிரசாத் ஜூவல்லரி உரிமையாளர் திரு குணா மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்.

இன்று பெய்த மழையில் லெபோ அம்பாங் பகுதியே வெள்ளக்காடானது. மழை நீர் கடைகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களையும் நாசமாகி விட்டது என்றார்.

லெபோ அம்பாங் உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது ஊரடங்கு அமலில் இருப்பதால் மழை நீர் கடையினுள்  பாய்ந்தபோது உடனடியாக எந்த பொருளையும் மீட்கமுடியாமல் போனது என்றார்.

லெபோ அம்பாங் வட்டாரத்தில் தொடர்மழை பெய்தால் வெள்ளக்காடாவது தொடர்கதையாக இருக்கிறது என்று குணா வேதனையுடன் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here