தங்கள் பிரஜைகளை திரும்ப பெற மூன்று நாடுகள் ஒப்புதல்

முறையான ஆவணம் இன்றி சட்டவிரோதமான முறையில் மலேசியாவில் குடியிருக்கும் தங்களின் பிரஜைகளை திரும்ப பெற மூன்று நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

மலேசிய குடிநுழைவு தடுப்பு முகாம்களில் இருக்கும் சட்டவிரோத குடியேறிகளுக்கு கோவிட் 19 சோதனை நடத்தப்பட்டன. அதில் கோவிட் தொற்று இல்லாதவர்களை அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப மலேசிய அரசாங்கம் முடிவெடுத்தது.

அதன் தொடர்பில் தற்போது இந்தோனேசியா, நேப்பாள், வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் தங்களின் பிரஜைகளை ஏற்றுக் கொள்ள ஒப்புதல் கூறியிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

இத்திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. கோவிட் 19 காலக் கட்டத்தில் பாதுகாப்பு காரணமாக மலேசிய அரசாங்கம் குறிப்பிடிருக்கும் விதிகளை பின்பற்றி அந்நியர்கள் அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுபப்படுவர். இதில் சம்பந்தப்பட்ட நாடுகளும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here