வேலை காரணமாக மலேசியர்கள் சிங்கப்பூருக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தற்காப்பு துறை துணை அமைச்சர் டத்தோசஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.
நாட்டின் வெளியுறவு துறை அமைச்சு அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துயுள்ளது. எனவே அரசாங்கம் அறிவித்திருக்கும் மீட்சியுறும் நடமாட்டக் கட்டுபாடு ஆணையின் போது வேலைக்காக மலேசியர்கள் அந்நாட்டிற்கு சென்று வரலாம்.
சிங்கப்பூரின் தொழில்துறைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதா என்ற தகவல்களை அரசாங்கம் கேட்டறியும். அதோடு அங்கு வேலை செய்யும் மலேசியர்கள் வேலைக்கு சென்று வர முடியுமா எனவும் கேட்டறியும்.
மலேசியாவைச் சேர்ந்த 3 லட்சம் பேர் வேலை, கல்விக்காக அனுதினமும் அந்நாட்டிற்குள் சென்று வர வேண்டியுள்ளது. ஆனால் கோவிட் 19 காலக்கட்டத்தில் அவர்களின் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்.