நகர்ப்புற வறுமை அறியப்பட்டிருக்கிறது

நகர்ப்புற வறுமை வேலை இழப்புகளை சமாளிக்க மத்திய அமைச்சகம் மூலம் அரசாங்கம் ஐந்து பெரிய திட்டங்களை செயல்படுத்தும் என்று அதன் அமைச்சர் டான்ஸ்ரீ அன்வார் மூசா தெரிவித்திருக்கிறார்.

அடுத்த வாரம் தொடங்கி திட்டமிடப்படும் இந்த அறிவிப்பு நகர்ப்புற ஏழை மக்களின் கவலைகளை அரசாங்கம் கவனிக்கிறது என்பதற்கு சான்றாக இருக்கும் என்றார் அவர்.

பெரிய நிறுவனங்கள் அல்லது கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்களையும் சந்திக்க விருப்பதாகக் கூறிய அவர், கூட்டாட்சி பிரதேசங்களில் உள்ளூர்வாசிகளுக்கு அவர்கள் வழங்கக்கூடிய வேலை வாய்ப்புகள் குறித்தும் விவாதிப்பார். இதன் மூலம் எழுகின்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்படும்.

முன்னதாக இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அதே நேரத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் உட்பட யாரை வேலைக்கு அமர்த்தலாம் என்பதையும் நிறுவன முதலாளிகள் தீர்மானிப்பார்கள். ஆனால், கோவிட் -19 க்குப் பிறகு, தங்கள் தொழிலைத் தொடர முடியாததால் வேலை இழந்த அல்லது வறுமைக்குத் தள்ளப்பட்ட  பலரை அறிந்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

நிறுவனங்களுக்குத் தேவையான தொழிலாளர்களின் எண்ணிக்கையை தானாக முன்வந்து பட்டியலிட நிறுவனத்திற்கு உதவுவதும், முடிந்தால் வேலை தேவைப்படும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் இத்திட்டதில் அடங்கும்.

கோலாலம்பூர் போக்குவரத்து மையத்தைச் சேர்ந்த வீடற்ற 44 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதை அவர் கூறினார். அதன் பின் செய்தியாளர்களிடம் அன்வார் இதனைத் தெரிவித்தார்..

முதலாளிகளுடனான சந்திப்பில் 5,000 க்கும்  அதிகமான வேலை வாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டு, கட்டுமானத் துறைக்கு மேலதிகமாக, வேலை தேடுபவர்கள், வணிகங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளையும் தமது அமைச்சகம் கவனிக்கும் என்றும் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

வேலை செய்ய, அல்லது தொழில் செய்ய விரும்பும் மக்களுக்கு பிரச்சினைகளை எளிதாக்க முயற்சிசெய்யப்படும், இதற்கு முன்பு, பல வெளிநாட்டினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர், அவர்களில் சிலர் இங்கு செல்வந்தர்களாக மாறியிருக்கின்றனர். அந்த வாய்ப்பு உள்ளூர்வாசிகளுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த வருகை குறித்து அனுவார் கூறுகையில், பாதிக்கப்பட்ட வீடற்ற மக்கள் அனைவரும் இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து மூன்று மாதங்கள் வரை அமைச்சின் செலவில் சிகிச்சை பெற முன்வந்தனர்.

வீடற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு முன்பே வேலை தேடுவதன் மூலமாகவோ அல்லது அவர்கள் சமூகத்திற்கு திரும்புவதற்கான வேலை தேர்ச்சித் திறன்பயிற்சிகள் எடுப்பதன் மூலமாகவோ மாற்றத்தைப் பெறுவத்ற்கும் இத்திட்டம் வழி வகுக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here