பாசத்தின் முகவரி அப்பா

பால்மரக் காட்டின் பசுமையின் மணம் முகம் சுளிக்க வைத்த போதெல்லாம்
நீ பாசத்தை மட்டுமே ரப்பர் பாலாய் சுரந்தாயே!
அப்போதெல்லாம்
வெள்ளை நிறத்தின் அர்த்தம் விளங்கவே இல்லை.
உன்,
உள்ளத்தின் ஆழத்தை உணராமல் இருந்தபோதெல்லாம் ஒரு புன்னகையால் மறைத்து,
புரிய வைத்ததின் அர்த்தம் புரிய பல ஆண்டுகள் பிடித்தன.
உன் ,
அன்பைப் படித்துப் புரியும்போது நீ
அர்த்தத்தோடு அணைத் தாய்
அர்த்தம் புரியும்போது உன் கொலிங்ஜ் போனது.
கேட்டேன்! நீ,
ஆண்டனிடம் சென்று விட்டதாக ஆறுதல் சொன்னார்கள்.
புரிந்துகொண்டேன் .
நானும் ஒருநாள் அங்கு வருவேன்.
அப்போது முகவரி மாறாமல் இருப்பாயா?
நான் உன்னை தப்பாய் நினத்தபோதெல்லாம்
நீ
என் அப்பாவாக மட்டுமே இருந்தாயே!
உன்னிலும் தாய்மை உணர்ந்தேன்
நானும் இப்போது அப்பாதான்!
அன்புடன்

கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here