போலி செய்திகளுக்கு அமிதாப் பச்சன் பதிலடி

பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.

இந்தியளவில் பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்திய அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த பலரும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில், அமிதாப்பச்சன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்திருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு அமிதாப் பச்சன் இந்த செய்தி தவறானது, பொறுப்பற்றது, போலியானது நான் இன்னும் கொரோனாவில் இருந்து விடுபடவில்லை என்று டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here