பெட்டாலிங் ஜெயா, செப். 11-
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இரண்டு இந்திய பிரஜைகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் கைக்கலப்பாக மாறி இருவரும் தாக்கிக் கொண்டனர்.
இந்த சண்டையில் கணேசன் வயது 30 தலையில் பலமாக தாக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சண்டையில் ஈடுபட்டு கணேசனை அடித்துக் கொன்றதாக கூறப்படும் அழகேசன் வயது 29 என்று நபரை போலீசா கைது செய்தனர்.
அவரிடம் இருந்து கூர்மையான ஆயுதத்தை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை கைது செய்யப்பட்ட நபரை பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு 7 நாட்கள் விசாரனைக்காக தடுத்துவைக்கப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
– இரா.கோபி